தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

By

Published : Mar 22, 2022, 1:53 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் கேள்வி நேரத்தில் மடத்துக்குளம் உறுப்பினர் மாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புகளின் எண்ணிக்கையை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக கரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலையில் புதிய மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.

கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரத்துக்கான கட்டமைப்பை ஏற்படுத்த வில்லை. நிதியும் ஒதுக்கவில்லை. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை என்பதால் சமீபத்தில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்திய நிலையில், மின்சாரம் வழங்க உரிய கட்டமைப்பை ஏற்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. விரைவில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:'பீஸ்ட்' திரைப்படம் - ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ்

ABOUT THE AUTHOR

...view details