சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள மின் நுகர்வோர் தங்களின் மின்சார இணைப்பு அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின்சாரத்துறை கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பினை வெளியிட்டது. நவம்பர் 28ஆம் தேதி முதல் பொது மக்கள் மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை மக்கள் இணைக்கத் துவங்கிவிட்டனர்.
மேலும் மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தமாதம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென கால அவகாசத்தை மின்சாரத்துறை அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 2.33 கோடி பேர் மின்சாரத்துறை மூலம் மின்சாரம் பெற்று வருகின்றனர். அதில், தற்போது வரை 1.50 கோடி பேர் அவர்களின் மின்சார எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.