சென்னை: கொளத்தூரில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது. இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கிடங்கு இருவர், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் நிலம் இருவருக்கு சொந்தம் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை, போலி ஆவணங்கள் மூலம் இருவரும் பெற்றுள்ளதாக கூறி, மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.