தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2021, 7:15 PM IST

ETV Bharat / state

தொடர் மழையால் ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றப்படும் - பொதுப்பணித் துறை

சென்னை: கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

chembarampakkam
chembarampakkam

கடந்த மூன்று நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக சென்னையின் குடிநீர் வழங்கல் ஏரிகளான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகியவை நிறைந்துவருகின்றன. இதனால் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உபரிநீரை வெளியேற்றிவருகின்றனர். வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12ஆம் தேதிவரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பொதுப்பணித் துறை அலுவலர் கூறுகையில், "புழல் ஏரியிலிருந்து இன்று வினாடிக்கு 368 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரத்து 150 கனஅடி நீரும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டாயிரத்து 997 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரியிலிருந்து வெறும் 10 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. வரத்து நீரின் அளவைப் பொறுத்து படிப்படியாகத் தண்ணீர் திறக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த ஜனவரி 5, 7 ஆகிய தேதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மூன்றாயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். இதன் முழுக் கொள்ளளவு மூன்றாயிரத்து 645 மில்லியன் கனஅடியாகும். ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காலை நிலவரப்படி 23 அடியை எட்டியது.

இதையும் படிங்க:'கார்ப்பரேட் மோடி குயிட், குயிட் கால் பேக் பேடி!'

ABOUT THE AUTHOR

...view details