காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,
“நாட்டிலே இன்றைக்கு பொருளாதாரம் நசுக்கி கொண்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும், பழி வாங்க வேண்டும் என்கிற காரணத்தால் தான் சிதம்பரத்தை கைது செய்து மோடி கேடி வேலைகளை செய்து வருகிறார்.