தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - நடைபெறாத ரமலான் சிறப்பு தொழுகை

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஐசிசி தேர்தல்
ஐசிசி தேர்தல்

By

Published : May 25, 2020, 9:11 PM IST

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 805 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

காந்திக்குப் பதில் கோட்சே - ஏபிவிபி நிர்வாகி அட்டூழியம்

போபால்: ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்குப் பதில் நாதூராம் கோட்சேவின் புகைப்படத்தை கிராபிக்ஸ் முறையில் இணைத்து ஏபிவிபி நிர்வாகி ஒருவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கரோனா ஊரடங்கு - பள்ளிவாசல்களில் நடைபெறாத ரமலான் சிறப்பு தொழுகை

சென்னை: ஊரடங்கு காரணமாக பள்ளி வாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெறவில்லை.

நாகர்கோவில் காசிக்கு நாளை மருத்துவப் பரிசோதனை

கன்னியாகுமரி: பல்வேறு பாலியல் புகார்கள், பண மோடி புகார்களுக்கு உள்ளாகியுள்ள காசிக்கு நாளை நாகர்கோவில் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மின்னல் முரளி திரைப்பட சர்ச் செட்டை இடித்த கும்பல் - பினராயி விஜயன் எச்சரிக்கை!

திருவனந்தபுரம்: மின்னல் முரளி என்கிற மலையாள திரைப்படத்திற்காக போடப்பட்டிருந்த சர்ச் செட்டை வலதுசாரி வகுப்புவாதக் குழுவைச் சேர்ந்த நபர்கள் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மீம்ஸ்களின் நாயகன் கவுண்டமணி- HBD Goundamani

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு தனது நகைச்சுவை நடிப்பால் ஆட்சி புரிந்த நடிகர் கவுண்டமணியின் பிறந்த நாள் இன்று.

வரம்பு மீறிய காதல்... 9 பேர் கொடூர கொலை - கொலையாளி பிடிபட்டது எப்படி?

கணவரை பிரிந்து வாழும் பெண்ணின் மீது காதல். அந்த காதல் தடைபடவே, மனதில் ஏற்பட்ட மாறுதல்களால் பெண்ணுடன் சேர்த்து குடும்பத்தினருடன் தீர்த்துகட்ட திட்டம் தீட்டிய சஞ்சய் குமார். அதன்படி 9 கொடூர கொலைகளை நிகழ்த்தி தற்போது காவல் துறையினர் பிடியில் சிக்கியுள்ளார் கொலையாளி.

இப்போதே சூடுபிடித்த ஐசிசி தேர்தல்!

ஐசிசி தலைவருக்கான தேர்தல் தொடர்பாக இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்களிடையே பணப்பரிமாற்றம் நடந்ததாக தற்போது ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகர் அச்சம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையைப் புறக்கணித்த விமானியே விபத்துக்குக் காரணம்!

கராச்சியில் சமீபத்தில் விபத்துக்குள்ளான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் விமானம் தரையிறங்க நெருங்கியபோது, விமானி போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் எச்சரிக்கைகளை புறக்கணித்தார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details