தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2020, 3:01 PM IST

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top 10 3pm news
etv bharat top 10 3pm news

ராஜஸ்தானில் எட்டு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள சுரு நகரில் எட்டு வயது சிறுவன், வயதில் மூத்த சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் 6 பாலங்களை திறந்துவைத்த ராஜ்நாத் சிங்

ஜம்மு - காஷ்மீரின் அக்நூர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நான்கு பாலங்களையும், ராஜ்பூரா பகுதியில் உள்ள இரண்டு பாலங்களையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

'தேர்வு பற்றி மத்திய அரசின் முடிவு பேரழிவை உருவாக்கும்': பஞ்சாப் எம்.பி., பிரதாப் சிங்

டெல்லி: கல்லூரிகளுக்கான இறுதியாண்டு தேர்வு பற்றிப் புதிய வழிகாட்டுதல்களை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் மத்திய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

13 ஆண்டுகளாக கட்டப்படும் காமராஜர் மணிமண்டபம் - ஆமைவேகத்தில் நடக்கும் பணி

புதுச்சேரி: ஐஏஎஸ் ஐபிஎஸ் பயிற்சி அரங்கம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த நூலகம் உள்ளிட்ட வசதிகளுடன் 13 ஆண்டுகளாக ஆமைவேகத்தில் நடைபெற்று வரும் காமராஜ் மணிமண்டபம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அடைத்துவைத்து 3 மாதம் பாலியல் தொல்லை

சென்னை: திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, வீட்டில் அடைத்து வைத்து மூன்று மாதம் பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கரோனா வைரஸ்: விமர்சனங்களை விளாசிய ஜோகோவிச்

ஏட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடரால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானது என்ற விமர்சனத்திற்கு செர்பிய நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பதிலடி கொடுத்துள்ளார்.

அழகின் அளவுகோலாக நிறம் இல்லை - அதிதி ராவ் ஹைதாரி

மும்பை: அழகின் அளவுகோலாக நிறம் ஒருபோதும் இருக்காது என அதிதி ராவ் ஹைதாரி கூறியுள்ளார்.

இந்தியா தன்னால் முடிந்ததை செய்துள்ளது - சீன மோதல் குறித்து அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: சீனாவில் எல்லையில் ஏற்பட்ட மோதல் விவகாரத்தில், இந்தியா தன்னால் முடிந்ததை செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்க்கு எதிராக வழக்குத் தொடரும் பல்கலைக்கழகங்கள்!

வாஷிங்டன்: வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றுவது தொடர்பாக ட்ரம்ப் அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக எம்ஐடி, ஹார்வர்டு ஆகிய பல்கலைக்கழகங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details