தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவையில் இன்று: உடனுக்குடன் உங்கள் ஈடிவி பாரத் தமிழில்...! - TN Assembly

ETV Bharat Live from TN Assembly
ETV Bharat Live from TN Assembly

By

Published : Mar 23, 2020, 10:46 AM IST

Updated : Mar 23, 2020, 1:02 PM IST

12:39 March 23

பிடிவாதமாக சட்டப்பேரவையை நடத்துகின்றனர் -காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி!

சட்டப்பேரவையை சபாநாயகர் பிடிவாதமாக  நடத்திவருதாக காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் விஜயதாரணி தெரிவித்தார்.

முழு விவரங்களுக்கு இதை படியுங்கள்...'வெளியுலக தொடர்பை ஏற்படுத்த நோயாளிகளுக்கு டிவி வழங்குக' - விஜயதாரணி கோரிக்கை

11:01 March 23

சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம்!

சபாநாயகர் தலைமையில்  நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமை செயலக செயலாளர் பங்கேற்றனர்.

11:01 March 23

சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் வரிசைகள் காலியாக உள்ளன.

11:01 March 23

கரோனா நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

சென்னை,காஞ்சிபுரம்,ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைபடுத்த  மூன்று மாவட்ட ஆட்சியர்கள், மூத்த அமைச்சர்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிர படுத்துதல், போக்குவரத்து, பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

10:51 March 23

திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை புறங்கணிப்பு!

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையை புறக்கணிப்பதாக திமுக கொறடா சக்கரபாணி அறிவித்தார்.

முழு விவரங்களுக்கு இதை படியுங்கள்...சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்க திமுக முடிவு

10:29 March 23

தொடங்கியது சட்டப்பேரவை...!  

காலையில் 10 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. இதில் பள்ளிக்கல்வித் துறை, மின்சாரத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சட்டத்துறை, உயர்கல்வித் துறை, உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு துறை, போக்குவரத்துத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்ந்த கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். அதனைத்தொடர்ந்து திருவாரூர் ஆழி தேரோடும் வீதிகளில் புதைவட மின் கம்பிகள் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கொண்டு வந்துள்ள அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் பதிலளிக்கிறார்.  

அதேபோல் கீழ்வேளூர் தொகுதியில் நிலக்கடலை சாகுபடி குறைந்து உள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன் அவசர கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த இரண்டு கவன ஈர்ப்பு தீர்மானங்களும் பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அதன்பின்னர் 2020-21ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகளை துணை முதலமைச்சரும் நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

மேலும் இந்த மானியங்கள் மற்றும் சட்ட முன்மொழிவுகளை இன்றே நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் முன்மொழியப் படுகிறது அதனை தொடர்ந்து சட்டப்பேரவை முடிவுகள் இன்று நிறைவேற்றப்பட்டு நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் அதன்பின்னர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும் கரோனா வைரஸ் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.

10:22 March 23

சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் செய்தி விளம்பரம் மற்றும் எழுதுபொருள் அச்சுத் துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளன. 

Last Updated : Mar 23, 2020, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details