தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்னியல் பிரிவில் 400, இயந்திரவியல் பிரிவில் 125, கட்டடவியல் பிரிவில் 75 என மொத்தம் 600 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பப்பதிவு கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றுவந்தது. இருப்பினும், இது குறித்தான முறையான அறிவிப்பு இல்லாத காரணத்தினால் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, மின்வாரிய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக மார்ச் 16ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.