தாம்பரம் அடுத்த மாந்தோப்பு தங்கவேலு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பொன்னுரங்கம் (50). இவருடைய மகன் பாலாஜி(17), அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.
நேற்று பாலாஜியின் தந்தை மற்றும் தாய் வல்லக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த பொன்னுரங்கம் பாலாஜியின் படுக்கை அறையின் கதவைத் தட்டி நீண்ட நேரம் திறக்காததால், கதவை உடைத்து பார்த்தார். அப்போது பாலாஜி படுக்கை அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தாம்பரத்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை இதைக் கண்டு பொன்னுரங்கம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:ஆடுகளைத் திருடி விற்பனை செய்துவந்த இருவர் கைது