தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

' சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம் மோசடி விவகாரம்- 11.62 கோடி மதிப்பிலா பொருட்கள் முடக்கம்! - அமலாக்கத்துறை

சென்னையைச் சேர்ந்த 'சுரானா குழும நிறுவனம்' சுமார் ரூ.4 ஆயிரம் கோடி பணத்தை வங்கிகளிடம் இருந்து பெற்று மோசடி செய்த விவகாரத்தில் கூடுதலாக 11.62 கோடி மதிப்பிலான பொருட்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம் மோசடி விவகாரம்- 11.62 கோடி மதிப்பிலானவை முடக்கம்!
ரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம் மோசடி விவகாரம்- 11.62 கோடி மதிப்பிலானவை முடக்கம்!

By

Published : Dec 28, 2022, 10:48 PM IST

சென்னையைதலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை, ஐ.டி.பி.ஐ, எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து 3,986 கோடி ரூபாய் பணத்தை கடனாகப் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் கடனாக 1,301.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் 1,495.76 கோடி ரூபாயை ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தும் கடன் பெற்று, இந்த கடன் தொகையைத் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கடந்த ஜூலை 12 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே சுரானா குழும நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 113.32 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது கூடுதலாக சுரான குழும நிறுவனத்துக்கு தொடர்புடையவர்களின் 11.62 கோடி மதிப்பிலான நகை, விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details