தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 1, 2023, 6:19 PM IST

ETV Bharat / state

இந்தியாவில் மின்னணு கணினிகளின் எதிர்காலம் - சென்னை ஐ.ஐ.டியில் 6ஆம் தேதி கருத்தரங்கு!

சென்னை ஐ.ஐ.டியின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்தியாவில் மின்னணுவியலின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் இந்தியா RISC-V கருத்தரங்கை ஆகஸ்ட் 6ஆம் தேதி நடத்துகிறது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:ஆர்.ஐ.எஸ்.சி-V (RISC-V Reduced Instruction Set Computer) என்பது நிறுவப்பட்ட குறைக்கப்பட்ட அறிவுறுத்தல் தொகுப்பு கணினி கொள்கைகளின் அடிப்படையில் ஒரு திறந்த நிலையான அறிவுறுத்தல் தொகுப்பு கட்டமைப்பு ஆகும். மற்ற ஐ.எஸ்.ஏ (ISA-International Society of Automation) வடிவமைப்புகளைப் போலன்றி, ஆர்.ஐ.எஸ்.சி-Vஆனது ராயல்டி இல்லாத திறந்த மூல உரிமங்களின்கீழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டியின் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை (IITM Pravartak Technologies Foundation) ஆகியவை இணைந்து ஆர்.ஐ.எஸ்.சி-V பாதையின் மூலம் இந்தியாவில் மின்னணுவியலின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில் டிஜிட்டல் இந்தியா ஆர்.ஐ.எஸ்.சி-V (RISC-V Reduced Instruction Set Computer) கருத்தரங்கை ஆகஸ்ட் 6ஆம் தேதி நடத்துகிறது.

இதில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று, இந்தியாவில் வளர்ந்து வரும் ஆர்.ஐ.எஸ்.சி-V சுற்றுச்சூழல் அமைப்பு பற்றிய நுண்ணறிவைப் பெறலாம் எனவும்; இதற்குப் பதிவு மற்றும் பங்கேற்புக்குக் கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கருத்தரங்கிற்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் https://pravartak.org.in/dirv_tech_confluence_registration என்ற பின்வரும் இணைப்பின் வழியாக வளைதளம் மூலம் கருத்தரங்கிற்கான பதிவினை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சக இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஆர்.ஐ.எஸ்.சி-V மற்றும் ஐ.எஸ்.ஏ (ISA-International Society of Automation)யை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது நுண்செயலியான 'சக்தி'யை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி.காமகோடி ஆகியோர் இந்த நிகழ்வில், பிற முக்கிய பிரமுகர்களுடன் உரையாற்ற உள்ளனர் என்று சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் நுண்ணறிவு தொழில்நுட்ப சொற்பொழிவுகள், உள்நாட்டு ஆர்.ஐ.எஸ்.சி-V செயலிகளை வெளிப்படுத்தும் அரங்குகள், ஈர்ப்புமிக்க ஹேக்கத்தான் முடிவு மற்றும் சிறப்பு முதலீட்டாளர் அமர்வு ஆகியவை இடம்பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் ப்டிங்க:ரஷ்ய விண்வெளி ஆய்வகத்திற்கு செல்லும் தமிழக மாணவர்கள்: விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details