சென்னை தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகே இன்று (பிப்.25) காலை சுமார் 6 மணியளவில் தாம்பரம்- பீச் ரயில் வழித்தடத்தில் உள்ள ஓவா் ஹெட் எலட்ரிக் ஒயா் (O H E) அறுந்தது. இதனால் அந்த நேரத்தில் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டது.
அதனை சரி செய்யும் பணி தாமதம் ஆனதால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான ரயில் சேவை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விரைவு ரயில் பாதையில் இயக்கப்பட்டது. பின்னர் மின் பராமரிப்பு ஊழியா்கள் பழுதை சரிபார்த்ததும் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.