தமிழ்நாடு

tamil nadu

குடியாத்தம், திருவொற்றியூரில் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு தேர்தல்!

By

Published : Jul 24, 2020, 6:43 PM IST

சென்னை: குடியாத்தம், திருவொற்றியூருக்கு செப்டம்பர் 7ஆம் தேதி பிறகு தேர்தல் நடத்த தயார் என தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு
தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், கரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

அதற்கு பிறகு தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட்டால் தேர்தல் நடத்த தயார் நிலையில் உள்ளோம்.

ஏற்கனவே இரு தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு உள்ளிட்டப் பணிகள் தொடங்கிவிட்டன.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலை மாநகராட்சி வழங்கலாம், அப்படியில்லை என்றால் வழக்கம் போல் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் விண்ணப்பம் 7-ஐ பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியாத்தம் நகராட்சியில் வேகமாக பரவி வரும் கரோனா: 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு

ABOUT THE AUTHOR

...view details