சென்னை அம்பத்தூர், இந்தியன் பேங்க் காலனியில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கதிரேசன் (62). இவர், அதே பகுதியில் உள்ள கள்ளிக்குப்பம், கங்கை நகர் முதல் மெயின் ரோட்டில் கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், கதிரேசன் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, அத்தெருவில் மின் கம்பத்தில் இருந்த கம்பி ஒன்று அறுந்து, நின்றுகொண்டிருந்த கதிரேசன் மீது விழுந்தது. இதில், அவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.