சென்னை: இராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம்(65). இன்று காலை திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட இவர், வீடு திரும்புவதற்காக எண்ணூரில் இருந்து திருவான்மியூர் செல்லும் 1C மாநகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் பேருந்து நிலையத்தில் இறங்குவதற்காக தயாரான இவர், மாநகர போக்குவரத்து ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்ததில் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.