இந்த ஆண்டு 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 2ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வை 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 மாணவர்களும் 11ஆம் வகுப்புத் தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 082 மாணவர்களும் எழுத உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவர்கள் எழுத உள்ளனர்.
கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 9 லட்சத்து 21 ஆயிரத்து 339 மாணவர்கள் எழுதியிருந்தனர், இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரத்து 230 மாணவர்கள் எழுதவிருக்கின்றனர்.