தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 2018-19, 2019-2020ஆம் ஆண்டுகளுக்கான 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஐந்து நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்! - இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணை
சென்னை: 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப் பணி தொகுதியின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
![இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!](https://etvbharatimages.akamaized.net/assets/images/breaking-news-placeholder.png)
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் க. சண்முகம், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ. கார்த்திக், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் ரெ. கோதண்டராமன், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க... தயங்காமல் பிளாஸ்மா தானம் செய்வோம்! சக உயிர்களைக் காப்போம்! - முதலமைச்சர்