சென்னை:தங்கமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் 15) தங்கமணி, அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்கள், சென்னையில் 14 இடங்கள், ஈரோட்டில் எட்டு இடங்கள், சேலத்தில் நான்கு இடங்கள், கோயம்புத்தூர், கரூரில் தலா இரு இடங்கள், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பூர், ஆந்திரா மாநிலத்தில் தலா ஒரு இடம், பெங்களூருவில் இரண்டு இடங்கள் என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது.
விரைவில் விசாரணை?