தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை! - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வரும் 11ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Dry
Dry

By

Published : Feb 7, 2023, 3:51 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்.7) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழ்நாடு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை முதல் வரும் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மழை பாதிப்பு ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை!

ABOUT THE AUTHOR

...view details