தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது போதையில் காவலர்களிடம் தகராறு செய்த இருவர் கைது - மது போதையில் காவலர்களிடம் இடையூறு செய்த இருவர் கைது

சென்னை : மது போதையில் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்டதோடு அல்லாமல், காவலர்களையும் தாக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

drunkers who attacked police got arrested
drunkers who attacked police got arrested

By

Published : Jun 1, 2020, 2:20 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை (வயது 36), அமுல்ராஜ் (வயது 35) ஆகிய இருவரும் சென்னை மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரைப் பார்ப்பதற்காக இருவரும் மருத்துவமனை வந்துள்ளனர்.

ஆனால் உறவினரை சந்திக்கும் முன்பே மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்பட அனைவரையும் தகாத வார்த்தையால் பேசி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனை சார்பில் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், அவ்விருவரையும் அழைத்து விசாரிக்க முற்பட்டனர். அப்போது இருவரும் காவல் துறையினரையும் தகாத வார்த்தையில் திட்டவே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

மது போதையில் காவலர்களிடம் வம்பிழுக்கும் குடிகாரர்கள்

மேலும் இவர்களைத் தடுக்க முற்பட்ட பெண் காவலரையும் அடிக்க சென்றுள்ளனர். தொடர்ந்து அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, காவல் துறையினர் வாகனத்தில் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மனிதனின் மிருகத்தன்மை: பார்வையை இழந்த நாய்

ABOUT THE AUTHOR

...view details