நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை தவிர வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி பெரும்பாலான பொதுமக்கள் வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனால் உத்தரவை மீறும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சென்னையில் காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஒரு சில சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க காவல்துறையினர் ட்ரோன் (ஆளில்லா விமானம்) கருவியை பயன்படுத்தி வருகின்றனர்.