உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா என்னும் வைரஸ் கிருமியானது தமிழ்நிலத்தை விட்டுவைக்கவில்லை. மருத்துவர்கள், சாமானியர்கள், காவல் துறையினர், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது இந்த கொடிய வைரஸ்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.