சென்னை: நொளம்பூர் ஸ்ரீராம் நகர்ப் பகுதியில் மிதுனம் என்ற பெயரில் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இதனிடையே கடந்த 28ஆம் தேதி குடியிருப்பில் வசித்துவரும் விஜயலட்சுமி என்பவர் தனது வளர்ப்பு நாய் ஜெர்மன் செப்பேர்டுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்று வயது சிறுமி சரஸ்வதியை நோக்கி அந்த நாய் குரைத்தபடி சென்றது.
இதனால் அச்சமடைந்த சிறுமி அலறியடித்து ஓடியுள்ளார். உடனே நாய் தனது உரிமையாளரின் கைகளிலிருந்து நழுவி சிறுமியைத் துரத்திச் சென்று கொடூரமான முறையில் கடித்தது.