தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியில் தீர்வு’ - Perungudi and Kodungaiyur yards

சென்னை: தமிழ்நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியில் தீர்வு காணப்படும் என மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

a raja Mp
ஆ.ராசா

By

Published : Feb 17, 2021, 6:40 AM IST

கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மூலம் கொடுங்கையூர், ஆர்.கே. நகர் பகுதி மக்களுக்குப் பல உடல் உபாதைகள் ஏற்படுவதால், அதனை அகற்ற வேண்டும் எனத் தொடர் கோரிக்கைகள் எழுந்துவந்தன. இந்நிலையில் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகப் பகுதியை மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ. ராசா இன்று ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கொடுங்கையூர் குப்பைக் கிடங்குப் பிரச்சினை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் உரிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். அது கிடப்பில் இருக்கும்போதே ஆட்சி முடிந்துவிட்டது. வரக்கூடிய திமுக ஆட்சியில் கொடுங்கையூர் பிரச்சினை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டுவது தொடர்பாக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். மத்திய அரசிடம் இதற்கான பயோ மைனிங் (குப்பைகளைத் தரம்பிரித்தல்) திட்டங்கள் இருப்பதால், மத்திய அரசின் உதவியோடு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்.

மக்களவை உறுப்பினர் ஆ. ராசா

கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்ற மத்திய அரசு உரிய கவனத்தைச் செலுத்தவில்லை என்றால் திமுக ஆட்சியில் ஆர்.கே. நகர், பெரம்பூர் பகுதி மக்களுக்குச் சுகாதாரச் சவாலாக விளங்கும் இந்த கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் சுத்தம் செய்யப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடுங்கையூர் குப்பை கிடங்கு பிரச்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்" என்றார்.

இதையும் படிங்க:ஐம்பது ஆண்டுகளில் 1000 நீர்நிலைகள் அழிப்பு: அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details