தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ட்விட்டரில் புகார் அளித்தால், ராஜ்யசபா கொண்டு செல்வேன் - வில்சன் எம்.பி. - முக்கியப் பொது பிரச்சனைகளை பகிருங்கள்

’தமிழ்நாட்டில் நிலவும் முக்கிய பொதுப்பிரச்னைகள் குறித்து ட்விட்டரில் பகிருங்கள்’, என திமுக எம்.பி. வில்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக எம்பி வில்சன்
திமுக எம்பி வில்சன்

By

Published : Nov 21, 2022, 6:17 PM IST

Updated : Nov 21, 2022, 7:19 PM IST

சென்னை: திமுகவின் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பவர், வில்சன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உரிமைகளை மீட்டும் தந்துள்ளார். அதேபோல் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டில் பல்வேறு பாெதுப் பிரச்னைகளுக்கு குரல் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், எம்.பி. வில்சன் தமிழ்நாட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்க, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிடுள்ள ட்விட்டர் பதிவில், ”நண்பர்களே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 07.12.2022 முதல் நடைபெற உள்ளது. ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லத்தக்க தமிழ்நாடு சார்ந்த / நாடு முழுமையும் உள்ள முக்கிய பொதுப்பிரச்னைகள் தொடர்பான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் தொடர்ந்து அதிரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக திமுக எம்.பி.வில்சன் குரல் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ராஜீவ் காந்தி கொலை வழக்கு... நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை... காங்கிரஸ் மறு சீராய்வு மனு...

Last Updated : Nov 21, 2022, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details