கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முடித்திருத்தும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சார்பிலும் அவ்வப்போது நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் முடித்திருத்தும் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.