தமிழ்நாடு

tamil nadu

பொருளாதார சரிவுக்கு பேரிடர் மேலாண்மை தோல்வியே காரணம் - பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்

By

Published : Sep 12, 2020, 2:50 PM IST

Updated : Sep 18, 2020, 4:47 PM IST

சென்னை: பேரிடர் மேலான்மை, ஊரடங்கு தவறாக அமல்படுத்தப்பட்டது ஆகியவையே தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணம் என்று திமுக மதுரை மத்திய எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

dmk mla

இது தொடர்பாக சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "வங்கி கடன் வழங்கும் வசதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டில் கடன் கிடைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த அரசாங்கம் தமிழின துரோகி. ஆர்.பி.ஐ படி அனைத்து விதத்திலும் வளர்ச்சியுள்ள நாடு தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளது. இதை பயன்படுத்தி இனி தமிழ்நாட்டிற்கு கடன் இல்லை என்று கூறியுள்ளனர்.

இது முட்டாள் தனம். எங்கு வளர்ச்சி உள்ளதோ அங்கு தான் கடன் தேவைப்படும். இந்து மதத்தினர் 90 விழுக்காடு பேர் உள்ள நாட்டில் இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வது தவறு. எச். ராஜா, நாராயணன் திருப்பதி, கே.டி. ராகவன் போன்றவர்களை விட கோயில்களுக்கும், இந்து மதத்திற்கும் அதிகம் நான் சென்றுள்ளேன். ஆனால், அவர்கள் ஏதோ இந்து காவலாளி போல் பேசி வருகின்றனர்.

உலகளவில் நாளொன்றுக்கு கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கரோனாவால் இந்திய பொருளாதாரம் சரியாக இல்லை. பேரிடர் மேலான்மை மிகவும் தவறாக அமல்படுத்தப்பட்டது. திட்டமிடல் முற்றிலும் இல்லை.

ஊரடங்கு தவறான மேலான்மை, இதுதான் பொருளாதார சரிவுக்கு காரணம். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு உள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பொருளாதார சரிவு குறைவு. இந்திய பொருளாதாரம் இன்னும் சரியும். இதை மிகவும் வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். பணமதிப்பிழப்பு, டிவின் டெவர் போன்ற பேரிடரை விட நமது நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் அடிபடும்" என்றார்.

இதையும் படிங்க:மருத்துவக் கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை!

Last Updated : Sep 18, 2020, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details