நில அபகரிப்பு வழக்கு: மா. சுப்பிரமணியனுக்கு முன்பிணை! - DMK MLA M.Subbiramaniyan
சென்னை: அரசு நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai HC
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே. கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்எல்ஏ-வும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா. சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.
இது சம்பந்தமான வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்பதால், மா. சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் தங்களுக்கு முன்பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, திமுக எம்எல்ஏ மா. சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கப்படுவதாக உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.