தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'3 மாதங்களில் அண்ணாவின் ஆட்சி!' - பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு தினம்

இன்னும் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் ஆட்சியை திமுக அமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதி ஏற்றுள்ளார்.

DMK leader Stalin vowed to establish the rule of  Anna in Tamil Nadu in three months
DMK leader Stalin vowed to establish the rule of Anna in Tamil Nadu in three months

By

Published : Feb 3, 2021, 2:12 PM IST

மறைந்த முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி சென்னை - வாலாஜா சாலையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

அமைதிப் பேரணியில் ஸ்டாலின்

பின்னர், அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இவருடன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ. ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தந்தை பெரியாரின் தனயன் - முத்தமிழறிஞர் கலைஞரின், தாய்த்தமிழ்நாட்டின் அண்ணன் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவுநாள் இன்று!

அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?

ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

மொழி - இனம் - நாடு காக்கும் உரிமை உணர்வு கொண்ட அண்ணாவின் ஆட்சியை மூன்று மாதங்களில் அமைப்போம்! உறுதியேற்கிறோம் இன்று!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details