தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நீதிமன்றம் - ஸ்டாலின் வரவேற்பு - மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை திமுக வரவேற்பதாகவும், தமிழ்நாடு அரசு இதில் மேல்முறையீடு செய்யக்கூடாது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

dmk stalin
dmk stalin

By

Published : May 9, 2020, 9:47 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் வீரியமாகப் பரவிவரும் நிலையில், மக்களின் உயிர் பற்றிச் சிறிதும் அக்கறையற்ற முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறந்திட உத்தரவிட்டது.

மக்கள் மீதே பழிபோட்டு, அண்டை மாநில எல்லைகளில் போய் வாங்குகிறார்கள் எனக் கூறி, தமிழ்நாட்டில் கடைகளைத் திறந்த நிலையில், முதல் நாளிலேயே எவ்வித சமூக ஒழுங்கையும், தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் டாஸ்மாக் கடைகள் முன்பாக பெருங்கூட்டம் கூடியது. உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு காலம் முடியும் வரை மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்கு ஒன்றின் மீதான விசாரணையில், மக்களின் உயிர் நலன் மீது அக்கறை கொண்டு, அரசின் மோசமான செயல்பாட்டிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவை திமுக வரவேற்கிறது. மேலும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட்டு, மக்களின் உயிரைப் பணயம் வைக்காமல் இருக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:காவல்துறைக்குப் பயந்து ஓடிய இளைஞருக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details