தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2020, 1:59 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கையில் சிறை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கைவைத்த ஸ்டாலின்!

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்வீட்
திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்வீட்

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 36 பேரையும் வரும் 18ஆம் தேதிவரை சிறையில் அடைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதும், தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட்

கைதுசெய்யப்பட்டுள்ள 36 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கருவிகளையும் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரியுள்ளார்.

இதையும் படிங்க...ஜேஇஇ முதன்மைத் தேர்விற்கான தேதி இன்று மாலை அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details