சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த யோகா தினத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறுகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு பிரதமர் மோடிக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய நாடுகள் உட்பட அனைவரும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் தற்போது அதில் சில கருத்துகள்தான் முன்னிறுத்தப்படுகின்றன. இந்தியாவின் நிலையை பிரமாண்டமாக உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதான் இந்த புதிய கல்விக் கொள்கை எனத் தெரிவித்தார்.