தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டையார்பேட்டையில் திமுக - அதிமுகவினரிடையே மோதல்: ஒருவர் மண்டை உடைப்பு! - திமுக - அதிமுகவினரிடையே மோதல்

சென்னை: தண்டையார்பேட்டையில் திமுக - அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரது மண்டை உடைந்தது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

clash
clash

By

Published : Apr 7, 2021, 8:01 AM IST

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட தண்டையார்பேட்டை இசிஐ மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 10 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. நேற்று அம்மையங்களில் மாலை நேரத்தில் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாகவே காணப்பட்டது.

அப்போது சுயேட்சை வேட்பாளர் போத்தி ராஜன் என்பவர் வாக்குச்சாவடி மையத்திற்குள் நீண்ட நேரமாக சுற்றிக்கொண்டிருந்ததால் திமுகவைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வெளியே செல்லும்படியும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பாதுகாப்புக்கு நின்ற காவல் துறையினர் போத்திராஜனை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். வெளியே வந்ததும் திமுகவைச் சேர்ந்த சிலர் போத்திராஜனுடன் வாக்குவாதம் செய்து விரட்டினர். சிறிது நேரத்திற்கு பிறகு போத்திராஜன் அதிமுகவைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து திமுகவைச் சேர்ந்வர்களுடன் வாக்குவாதத்திலும் மோதலில் ஈடுபட முயன்றதால் பதட்டமான சூழல் உருவானது.

திமுக - அதிமுகவினரிடையே மோதல்

மேலும் அங்கு துணை ராணுவமும், கூடுதல் காவல் துறையினரின் பாதுகாப்பும் இல்லாத நிலையில், அங்கிருந்த சில காவல் துறையினர் அதிமுகவைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென திமுகவைச் சேர்ந்த உமாசங்கர் என்பவரை தலையில் தாக்கி விட்டு அதிமுகவைச் சேர்ந்த சிலர் தப்பி ஓடியதால் மேலும் பதட்டம் அதிகரித்தது.

இதனால் ஆத்திரமடைந்த திமுகவைச் சேர்ந்தவர்கள், அதிமுகவைச் சேர்ந்தவர்களை விரட்டிப் பிடித்து தாக்க முயன்றனர். இதனை கண்டு பொதுமக்களும் அலறியடித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் அனைவர் மீதும் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்து கலைத்தனர். இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆர்.கே. நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details