தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லாவரத்தில் தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை! - DMDK Party Member Murdered In Pallavaram

சென்னை: பல்லாவரம் அருகே தேமுதிக பிரமுகர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பல்லாவரம் அருகே தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை  பல்லாவரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை  தேமுதிக பிரமுகர் கொலை  A Young Man Murder In Pallavaram  DMDK Party Member Murdered In Pallavaram  DMDK Party Member Murder
பல்லாவரம் அருகே தேமுதிக பிரமுகர் வெட்டி கொலை பல்லாவரத்தில் இளைஞர் வெட்டிக்கொலை தேமுதிக பிரமுகர் கொலை A Young Man Murder In Pallavaram DMDK Party Member Murdered In Pallavaram DMDK Party Member Murder

By

Published : Mar 2, 2021, 10:32 AM IST

Updated : Mar 2, 2021, 11:13 AM IST

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (36). இவர் தேமுதிக இளைஞர் அணி நகர துணை செயலாளராக உள்ளார். நேற்று (மார்ச்1) இரவு வழக்கம் போல், ராஜ்குமார் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே அவரது இருசக்கர வாகனத்தை இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜ்குமாரின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சங்கர் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் விசாரனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: ஒருவர் கைது, 3 பெண்கள் மீட்பு

Last Updated : Mar 2, 2021, 11:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details