தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த், பிரேமலதா! - அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்குகளை வாபஸ்

சென்னை: தங்களுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற்றனர்.

அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த், பிரேமலதா!

By

Published : Nov 13, 2019, 1:44 PM IST

தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சருக்கு எதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும் அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் சார்பிலும் அமைச்சர்கள் சார்பிலும் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

அந்த வழக்குகள் , சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா தொடர்ந்த 29 வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு மற்றும் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தாங்கள் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று கொள்வதாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க...ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை தடை நீடிப்பு

ABOUT THE AUTHOR

...view details