திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த வாக்காளர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், அதில் நிறைய குறைபாடுகள் உள்ளதால் அவர் தேர்தலில் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்