சென்னை: சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டு காலமாக இருந்து வருகிறார்.
அப்போது ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக பல்வேறு புகார்கள் வந்தன. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் உதவி பொறியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாயை புரோக்கர் செல்வகுமார் மூலமாக பெற்று மணி ஏமாற்றியுள்ளார்.
எடப்பாடிக்கு செக்
இது தொடர்பாக தமிழ்செல்வன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணி மீது இரண்டு பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.