தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2021, 1:11 PM IST

ETV Bharat / state

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தள்ளுபடி
வழக்கு தள்ளுபடி

சென்னை: கோயில் அன்னதான திட்டத்தில் இருந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை எதிர்த்து ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழிபாட்டு தலங்களும், பல்வேறு மத அமைப்புகளும் முன்வந்துள்ளன. எனவே இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

மேலும் மனுதாரர் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும், எதிர்காலத்தில் இதுபோல வழக்கு தொடர மாட்டார் என நம்புவதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சிறுவர்கள் இடையே தகராறு - தந்தை கைது

ABOUT THE AUTHOR

...view details