தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகையின் தொலைபேசி எண் கேட்டு ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல்... இயக்குனரிடம் போலீஸ் விசாரணை - Director al suriya arrested

நடிகை பத்மபிரியாவின் தொலைபேசி எண் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இயக்குனர் ஏ.எல்.சூர்யா மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bநடிகை பத்மபிரியாவின்harat
Etv Bநடிகை பத்மபிரியாவின்harat

By

Published : Sep 12, 2022, 6:40 AM IST

Updated : Sep 12, 2022, 8:13 AM IST

சென்னை : ராமாபுரம் பாரதி சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபு என்கிற லக்ஷ்மி பிரபாகர்(52).இவர் சினிமா துறையில் 30 வருடங்களாக ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.சூர்யா என்பவர் தான் எழுதியுள்ள பாரதியார் பாடலில் நடிகை பத்மப்ரியாவை வைத்து ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.இதையடுத்து இருவரும் இணைந்து பாரதியார் பாடலை ஒளிப்பதிவு செய்து முடித்துள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமி பிரபாகரிடம் நடிகை பத்மபிரியாவின் தொலைபேசி எண் தருமாறு கேட்டு இயக்குனர் ஏ.எல்.சூர்யா கடந்த நான்கு மாதங்களாக தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பத்மபிரியாவின் செல்போன் நம்பரை ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகர் கொடுக்காததால் ஆத்திரமடைந்த ஏ.எல்.சூரியா தகாத வார்த்தைகள் பேசியும், லட்சுமி பிரபாகருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகர் இது குறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 'இனி ஒன்றிணைந்து செயல்படுவோம்...!' - தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாக்யராஜ் பேச்சு

Last Updated : Sep 12, 2022, 8:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details