சென்னை: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத உள்ள மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை இன்று மதியம் 2 மணிமுதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3 முதல் 22ஆம் தேதி வரையிலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் 21ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளன.