தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீனர்கள் தமிழர்களுக்குப் பங்காளி உறவுகள்! - Chinese Prime Minister Xu Nai Lai

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகைக்கு முன்னரே சீனர்களின் பாதச்சுவடுகள் தமிழ்நாட்டில் பதிந்துள்ளன என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அந்த வரலாற்று சான்றுகளையும் சீன மக்களின் மனதில் இன்றும் வாழும் போதி தர்மரின் வரலாற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சீனர்கள்  தமிழர்களுக்குப் பங்காளி உறவுகள் என்பது புலப்படும்!

சீனர்கள்  தமிழர்களுக்கு பங்காளி உறவுகள்!

By

Published : Oct 11, 2019, 10:19 PM IST

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்வால் இன்று உலகமே மாமல்லபுரத்தை உற்று நோக்குகிறது. வரலாற்றின் ஏடுகளில் முக்கிய இடம் வகிக்கும் இன்றைய நாளை எண்ணி பூரிப்படையும் அதே நேரத்தில், வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் சீனர்கள் தமிழர்களுக்குப் பங்காளி உறவுகள் என்று புலப்படும். போதி தர்மரை வணங்கும் சீனர்கள் தமிழரின் எல்லையில் கால் பதிப்பது இது முதல் முறை அல்ல!

கி.மு 100இல் வாழ்ந்த சீனப்பயணி பான்-கோவின் வருகை குறிப்புகளும் கி.பி 550 - 600 இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான்-லியின் வரலாற்று குறிப்புகளும் நம் தமிழரின் பண்பாடு அப்போதே உலகமயமாகிப் போனதற்கான அடையாளங்களாய் நிற்கிறது.

தமிழர்கள் திருக்குறளின் வழி நிற்பவர்கள் என்ற மா-டவான்-லியின் குறிப்புகளின் பிரதிபலிப்பே, அடுத்தடுத்து தமிழ்நாட்டிற்கு வந்த சீனர்களையும் வரவேற்ற தமிழர்களின் விருந்தோம்பல் பண்பாடு என்றால் மிகையல்ல.

கி.பி 633இல் புத்தர் பிறந்த இடத்தை தரிசிப்பதற்கும், புத்த மதம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரிப்பதற்கும் இந்தியாவிற்கு வருகை தந்தார் புத்தத்துறவி யுவான் சுவாங். சுமார் 15 வருடங்கள் இந்தியாவில் அவர் வாழ்ந்த போது, வட இந்தியாவில் ஹர்சரும் தமிழ்நாட்டில் முதலாம் நரசிம்ம வர்மரும் ஆட்சி புரிந்தனர். இங்கு அவர் கண்ட அரிய காட்சிகளையெல்லாம் தன்னுடைய 'சியூக்கி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லாயிரம் மைல் கடந்து இந்தியா வந்து தாயகம் திரும்பிய அவர் 22 குதிரைகளில் விலை மதிக்க முடியாத கல்விச் செல்வங்களை அள்ளிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவான் சுவாங்கின் படைப்புகளை தங்களுடைய பொக்கிஷமாக கருதும் சீனர்களின் அடுத்த வருகை 1956இல் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் இருந்த கால கட்டத்தில் அப்போதைய சீன பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். தமிழர்களின் கட்டடக்கலை, பண்பாடு என்று அனைத்தையும் பார்த்து வியந்த சீனப்பிரதமர் சூ என்லாயின் பிரிவிடைக்குப் பின்பு மீண்டும் நிகழ்ந்திருக்கும் சீன அதிபரின் வருகை தமிழர்களுடைய நம்பிக்கைக் கீற்றுகளையும் அதே அன்பையும் பரவச் செய்திருக்கிறது.

இதையும் படியுங்க:

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு: செய்திகள் உடனுக்குடன்!

ABOUT THE AUTHOR

...view details