தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2020, 4:07 PM IST

ETV Bharat / state

ஊரடங்கு மீறல்: தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளி விவரங்கள்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 63 நாள்களில் ஊரடங்கை மீறியதாக ஐந்து லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக் காவலர்
போக்குவரத்துக் காவலர்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளபோதும், சாலைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதைத் தவிர மற்ற நேரங்களில் மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதில், ஊரடங்கு தொடங்கியது முதலே விதிகளை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும், காவல் துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 63 நாள்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக, ஐந்து லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மொத்தம் நான்கு லட்சத்து 22 ஆயிரத்து 867 வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்டு, ஏழு கோடியே 85 லட்சத்து 51 ஆயிரத்து 84 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் 2ஆவது நாளாக 39 விமான சேவைகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details