தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2021, 3:49 PM IST

Updated : May 15, 2021, 5:25 PM IST

ETV Bharat / state

டாக்டே புயல்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்

டாக்டே புயலால் இன்னல்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் தொண்டர்கள் செய்ய வேண்டும் என வயநாடு ராகுல் காந்தி எம்.பி., அறிவுறுத்தியுள்ளார்.

Cyclone Tauktae Rahul appeals party workers to provide assistance to needy people
டாக்டே புயல்: தொண்டர்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ள ராகுல் காந்தி

டெல்லி:இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர்," கேரளா, மகராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டாக்டே புயல் எச்சரிக்கையால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தப்புயலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு வேண்டிய உதவிகளை காங்கிரஸ் தொண்டர்கள் செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வுத்துறை அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாகவும், அது மே 16ஆம் தேதிக்குள் புயலாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், புயல் எச்சரிக்கையாக மே 17ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநில கடற்கரைகளில் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை துறை டாக்டே புயலை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய கடற்படையும், இந்தப்புயலையொட்டி தேவையான உதவிகளை மாநில அரசுக்கு செய்வதாக உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: 'இந்திய தடுப்பூசி கொள்கை சிக்கலை அதிகப்படுத்துகிறது' ராகுல் குற்றச்சாட்டு

Last Updated : May 15, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details