தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கு மீறல்: 4.48 லட்சம் பேர் கைது, ரூ.4.86 கோடி அபராதம்!

By

Published : May 10, 2020, 12:50 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாக சுமார் 4.48 லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 4.86 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதகாவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை செய்திகள்  தமிழ்நாடு காவல் துறை  ஊரடங்கு மீறல் வழக்குகள்  curfew violating case count  tamilnadu police  tn police  case count for curfew violating  ஊரடங்கு மீறல் அபராதம்
ஊரடங்கு மீறல்: 4.48 லட்சம் பேர் கைது, 4.86 கோடி ரூபாய் அபராதம்

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து அரசு சார்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடை திறக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டாலும் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

தடை உத்தரவை மீறும் இளைஞர்கள், பொதுமக்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 47 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 582 பேரை கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளது.

மூன்று லட்சத்து 69 ஆயிரத்து 799 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. நான்கு கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து179 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details