தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடை மீறியவர்களிடம் வசூலித்த அபராதம் ரூ. 17 லட்சம் - காவல்துறை

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 9 நாள்களில் போக்குவரத்து காவல்துறையினர் அபராதமாக 17 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

By

Published : Apr 4, 2020, 8:40 AM IST

Curfew arrest
Curfew arrest

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு காவல்துறையினர் தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 9 நாள்களில், 49 ஆயிரத்து 303 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. தடையை மீறியதாக 55 ஆயிரத்து 427 பேரை கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளது. 40 ஆயிரத்து 903 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 17 லட்சத்து 2 ஆயிரத்து 444 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியின குடும்பத்தினருக்கு அறுசுவை உணவு படைத்த கோவில் நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details