காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ராணிப்பேட்டையில் இருந்து 26 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பேருந்து சுங்குவார்சத்திரம் அருகே சென்ற போது நிலை தடுமாறி, அங்கே நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மேல் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் இருந்த மூவர் பலத்த காயமடைந்தனர். அதில், திருமால்பூரைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி அரசு (32) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பரந்தூரைச் சேர்ந்த பாலாஜி (26), நாராயணன் என்பவரின் மனைவி ருக்கு (42) ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர்.