இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சிபிஐ (எம்) கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “தமிழ் அறிஞரும், சிறந்த ஆய்வாளருமான பேராசிரியர் தொ. பரமசிவன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய முனைவர் பட்ட ஆய்வான 'அழகர் கோயில்' குறித்த ஆய்வு தமிழ் இலக்கிய ஆய்வுலகில் ஒரு திருப்புமுனையாகும். மானுடவியல், பண்பாட்டு நோக்கில் தமிழ்நாட்டு வரலாற்றை அவர் ஆய்வுசெய்து சிறந்த நூல்களை வழங்கியுள்ளார்.
அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள் உள்ளிட்ட அவரது நூல்கள் தமிழில் பெரும் கவனத்தைப் பெற்றவை. மார்க்சிய, பெரியாரிய நோக்கிலேயே அவர் தன்னுடைய ஆய்வை அமைத்துக் கொண்டார்.