தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’ஐஐடி மாணவி இறப்பில் நேர்மையான விசாரணை தேவை’ - முத்தரசன் - CPM Mutharasan

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து நேர்மையான விசாரணை நடத்தவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

mutharasan

By

Published : Nov 14, 2019, 7:22 PM IST

சென்னை ஐஐடியில் பயின்றுவந்த மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”மாணவி பாத்திமாவின் மர்ம மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் ஒரு பாதுகாப்பற்ற, பரிதாபகரமான சூழல் நிலவிவருவதாகவே கருதவேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதை தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. சமூக நிலையில் பலவீனமான, ஒடுக்கப்பட்ட சாதியினராவும், மதச் சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்குமே இந்த துயரம் ஏற்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்க இயலாத மத்திய, மாநில அரசுகளின் அவலநிலையை வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ள முத்தரசன், மாணவி பாத்திமா மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர் காலத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது எனவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஐடி கல்லூரியில் கேரள பெண் தூக்கிட்டு தற்கொலை! காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details