தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 12, 2021, 10:09 PM IST

ETV Bharat / state

இங்கிலாந்திலிருந்து தமிழ்நாடு வந்த 2 பேருக்கு கரோனா!

சென்னை: இங்கிலாந்திலிருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இரண்டு நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று மாநில மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை ஜனவரி 12ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் இன்று (ஜன.12) புதிதாக 60 ஆயிரத்து 287 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்இ தமிழ்நாட்டிலிருந்த 665 நபர்களுக்கும், இங்கிலாந்தில் இருந்து வந்த 2 பேருக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், பீகார், கர்நாடகா மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 671 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 489 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 8 லட்சத்து 27 ஆயிரத்து 614 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 6,807 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் குணமடைந்த 827 பேர் இன்று வீடு திரும்பினர். இதன்மூலம் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 8 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.


கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 3 நோயாளிகள் என மொத்தம் 8 பேர் இன்று உயிரிழந்தனர். இதன்மூலம், மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.

ஜனவரி 8ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் 2 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இருவர்களில் ஒருவர் விருதுநகர் மாவட்டத்தையும், ஒருவர் கரூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை -2,28,169
  • கோயம்புத்தூர் - 53,259
  • செங்கல்பட்டு - 50,651
  • திருவள்ளூர் - 43,096
  • சேலம் -32,035
  • காஞ்சிபுரம் -28,990
  • கடலூர் - 24,810
  • மதுரை -20,747
  • வேலூர்- 20,471
  • திருவண்ணாமலை - 19,260
  • தேனி - 16,976
  • தஞ்சாவூர் - 17,416
  • திருப்பூர் -17,431
  • விருதுநகர் -16,466
  • கன்னியாகுமரி - 16,599
  • தூத்துக்குடி- 16,180
  • ராணிப்பேட்டை - 16,018
  • திருநெல்வேலி -15,425
  • விழுப்புரம் - 15,084
  • திருச்சிராப்பள்ளி - 14,421
  • ஈரோடு -14,014
  • புதுக்கோட்டை -11,478
  • கள்ளக்குறிச்சி- 10,839
  • திருவாரூர் - 11,042
  • நாமக்கல் -11,405
  • திண்டுக்கல் - 11,078
  • தென்காசி - 8,328
  • நாகப்பட்டினம் - 8,293
  • நீலகிரி - 8,071
  • கிருஷ்ணகிரி- 7,967
  • திருப்பத்தூர் - 7,517
  • சிவகங்கை - 6,588
  • ராமநாதபுரம் -6,365
  • தருமபுரி- 6,511
  • கரூர் - 5,300
  • அரியலூர் - 4,660
  • பெரம்பலூர்- 2259
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 938
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -1,029
  • ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர் இதுவரை தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details